ஒடிசா மாநில ஆளுநர் மற்றும் மனைவிக்கு கொரோனா பாதிப்பு!

Default Image

ஒடிசா மாநில ஆளுநர் மற்றும் அவரது மனைவிக்கு கொரோனா பாதிப்பு.

முதலில் சீனாவில் பரவிய கொரோனா வைரஸ் தொடர்ந்து பல நாடுகளில் தனது ஆதிக்கத்தை செலுத்தி வருகிறது. இந்த வைரஸால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிற நிலையில், இந்த வைரசை தடுக்க தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இந்தியாவில் இந்த வைரஸால் 82 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 12 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்த வைரசானது, பாமர மக்கள் முதல் பிரபலங்கள் வரை அனைவர் மீதும் தனது தாக்குதலை நடத்தி வருகின்றது.

அந்த வகையில், ஒடிசா மாநில ஆளுநர் கணேசி லால் மற்றும் அவரது மனைவிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்