மாராட்டியத்தில் அதிகாலை 4.10 மணிக்கு நிலநடுக்கம்– பீதியில் மக்கள்

மராட்டிய மாநிலத்தில் இன்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் பீதி அடைந்துள்ளனர்.

இன்று அதிகாலை 4.10 மணியளவில் மராட்டிய மாநிலம் நாக்பூரில்  இருந்து வடக்கு மற்றும் வடகிழக்கு பகுதியில் இருந்து சுமார் 96 கி.மீ தொலைவிற்கு  திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது.

இது ரிக்டரில் 3.3 ஆக பதிவாகியுள்ளது என்று தேசிய நிலநடுக்கவியல் மையம் தகவல் தெரிவித்துள்ளது. அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் அச்சமடைந்தனர்.மேலும் நிலநடுக்கத்தால் பொருளிழப்பு உள்ளிட்ட விவரங்கள் எதுவும்  வெளியாகவில்லை.

author avatar
kavitha