தாடி வளர்த்த காவலர்… வீட்டுக்கு அனுப்பிய அதிகாரி… மழித்து விட்டு மீண்டும் பணியில் அந்த காவலர்…

Default Image

உயரதிகாரியின் முன் அனுமதியின்றி தாடிவளர்த்த காவலர் பணியிடை நீக்கம்.

உத்தர பிரதேச மாநிலத்தின் பாக்பத் மாவட்டத்தில் ரமலா காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வருபவர் இந்திஜார் அலி.  இவர் உயரதிகாரியின் முன் அனுமதியின்றி தாடி வளர்த்துள்ளார். எனவே,அவரை தாடியை மழிக்கும்படி காவல் கண்காணிப்பாளர் கூறியுள்ளார்.  ஆனால் 3 முறை கூறியும் உயரதிகாரியின் உத்தரவை அவர் ஏற்கவில்லை என கூறப்படுகிறது.  இதனால் ஒழுங்கீன நடவடிக்கையாக கடந்த 20ந்தேதி இந்திஜார் அலி பணியிடை நீக்கம்  செய்யப்பட்டார்.  கடந்த சில நாட்களாக இது விவாத பொருளாக இருந்து வந்தது.

இந்நிலையில், அலி தனது தாடியை மழித்து உள்ளார்.  இதுபற்றி தனது உயரதிகாரியிடம் விண்ணப்பம் வழியே இந்த தகவலை தெரிவித்து உள்ளார்.  இதனை தொடர்ந்து, அவரை மீண்டும் பணியில் சேர்ப்பதற்கான உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டன.  இதன்பின்பு அவர் மீண்டும் தன்னுடைய பணியில் சேர்ந்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

tamil llive news
ponmudi dmk
Lucknow Super Giants have won the toss
sneak her into boys hostel
Premalatha - Vijayakanth
TVKVijay - EPS
amit shah - mk stalin