“எதிர்க்கட்சி அரசியல் செய்யாமல் அவியலா செய்யும்”- மு.க.ஸ்டாலின்

Default Image

எதிர்க்கட்சி அரசியல் செய்யாமல் அவியலா செய்யும். 

மருத்துவ படிப்புக்கான 7.5% இட ஒதுக்கீடு விவாகரத்தில், ஆளுநர் பதில் அளிக்காமல் தாமதம் செய்து வருகிற நிலையில், சென்னை கிண்டியில், திமுக தலைவர் ஸ்டாலின்  தலைமையில், ஆளுநர் மாளிகை முன்பதாக ஆர்ப்பாட்டம் நடைபெற்று  வருகிறது.

இந்த ஆர்ப்பாட்டத்தில், திமுக பிரமுகர்கள் பலரும் கலந்து கொண்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தின் போது பேசிய மு.க.ஸ்டாலின், ‘எதிர்க்கட்சி அரசியல் செய்யாமல் அவியலா செய்யும் என்றும், அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5% உள் ஒதுக்கீடு மசோதா நிறைவேறி, 40 நாட்கள் ஆகியும் ஆளுநர் இன்னும் ஒப்புதல் அளிக்கவில்லை.’ என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும், மசோதாவுக்கு ஒப்புதல் தராமல் தாமதம் செய்தால் அதிமுக அரசு கைவிட்டு விடும் என ஆளுநர் நினைக்கிறார் என்றும், ஆளுநரை முதல்வர் கேள்வி கேட்காவிட்டாலும் நான் கேட்பேன் என்றும் கருணாநிதி, ஜெயலலிதா இருந்தவரை தமிழகத்தில் நீட் தேர்வு நுழைய முடியவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்