கணவருடன் வீடியோ காலில் பேசியபடி விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்ட இளம்பெண்!

Default Image

கணவருடன் வீடியோ காலில் பேசியபடி விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்ட இளம்பெண்.

குமரி மாவட்டம், அஞ்சுகிராமம் அருகே உள்ள அமராவதிவிளையை சேர்ந்தவர் செல்வராஜ்(36). இவரது மனைவி ஆக்னஸ் நந்தா(31). இந்நிலையில், செல்வராஜ் ஓமான் நாட்டில் எண்ணெய் கம்பெனி ஒன்றில், பொறியாளராக பணிபுரிந்து வருகிறார். இவர்களுக்கு திருமணமாகி 5 ஆண்டுகள் ஆகின்ற நிலையில், நான்கு வயதில் ஒரு மகளும், இரண்டரை வயதில் ஒரு மகனும் உள்ளனர்.

இதனையடுத்து, ஆக்னஸ் தனது இரண்டு பிள்ளைகளுடன், அவரது தாயார் வீட்டில் வசித்து வருகிறார். தனது கணவருடன் அடிக்கடி போனில் பேசி வந்த ஆக்னஸ், கடந்த இரு தினங்களாக இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், நேற்று முன்தினம் தனது கணவருடன் நீண்ட நேரம் போனில் பேசிக் கொண்டிருந்த ஆக்னஸ், திடீரென தனது கையில் இருந்த, பூச்சி மருந்து பாத்திலை திறந்து குடித்துள்ளார்.

பின் தனது கணவரிடம், பை! பை! எனக் கூறியவாறு போன் இணைப்பை துண்டித்துள்ளார். மனைவி விஷம் குடித்ததை கண்டு அதிர்ச்சியடைந்த செல்வராஜ், அவரது உறவினர்களுக்கு போன் செய்து கூறியுள்ளார். உடனடியாக சென்று பார்த்தபோது, ஆக்னஸ் படுக்கையறையில் நுரை தள்ளியவாறு கிடந்துள்ளார்.

இந்நிலையில், அவரை மீட்டு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இதனையடுத்து, அஞ்சுகிராமம் போலீசார், அவரது உடலை மருத்துவ பரிசோதனைக்காக, அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும், இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்