முன்னாள் உள்துறை அமைச்சர் ‘நயனி நரசிம்ம ரெட்டி’ காலமானார்!
![Default Image](https://dinasuvadu.com/wp-content/uploads/2024/02/Logo.png)
முன்னாள் உள்துறை அமைச்சர் நயனி நரசிம்ம ரெட்டி காலமானார்.
முன்னாள் உள்துறை அமைச்சரும் சட்டமன்ற சபை உறுப்பினருமான நயனி நரசிம்ம ரெட்டி, கொரோனா சிகிச்சைக்காக, ஹைதாராபாத்தில் உள்ள ஒரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். மேலும், இவருக்கு நுரையீரல் பாதிப்பும் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், இவருக்கு மருத்துவமனையில் சிகிச்சையளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். செப்டம்பர் 28-ம் தேதி கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில், அதற்க்கு பிந்தைய சோதனைகளில் நேட்டிவ் முடிவுகள் வந்தது குறிப்பிடத்தக்கது.
இவரது மறைவுக்கு அரசியல் பிரபலங்கள் பலரும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.