பெண் குழந்தைகளை கிள்ளுக்கீரையாக நினைக்கும் கீழ்த்தரமான கயவர்களுக்கு கடும் தண்டனை வழங்க வேண்டும் – விஜயகாந்த்

Default Image

பெண் குழந்தைகளை கிள்ளுக்கீரையாக நினைக்கும் கீழ்த்தரமான கயவர்களுக்கு கடும் தண்டனை வழங்க வேண்டும்.

பிரபல கிரிக்கெட் வீரரான முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாறு படமாக எடுக்கப்பட இருந்த நிலையில், இந்த படத்தில் அவர் முத்தையா முரளிதரன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த கதாப்பாத்திரத்தில் நடிப்பதற்கு, பிரபலங்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். காரணம் என்னவென்றால், முரளிதரன், இலங்கை நடைபெற்ற போராட்டத்தில் இலங்கை அரசுக்கு ஆதரவாக செயல்பட்டவர் என்ற குற்றசாட்டு கிளம்பியதால், இந்த எதிர்ப்பு கிளப்பியது.

இந்நிலையில், இதுகுறித்து முத்தையா முரளிதரன் தரப்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், ‘வருங்காலங்களில் தேவையற்ற தடைகள் ஏற்படாமல் இருக்க விஜய்சேதுபதி 800 திரைபடத்தில் இருந்து விலகி கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.’  தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், நடிகர் விஜய் சேதுபதி மகளுக்கு ட்விட்டர் மூலம் பாலியல் வன்கொடுமை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. சமூக வலைதளம் மூலமாக மிரட்டல் விடுத்த நபர் குறித்து சைபர் கிரைம் போலீஸ் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பதாக, தோனியின் மகளுக்கு ட்வீட்டர் மூலமாக மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

இந்நிலையில், இதுகுறித்து விஜயகாந்த் தனது ட்வீட்டர் பக்கத்தில், ‘தோனி மற்றும் விஜய் சேதுபதி மகள் குறித்து கற்பழிப்பு மிரட்டல் விடுத்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று தமிழக அரசை கேட்டுக் கொள்கிறேன். பெண் குழந்தைகளை கிள்ளுக்கீரையாக நினைக்கும், கீழ்த்தரமான கயவர்களுக்கு கடும் தண்டனை வழங்க வேண்டும்.’ என பதிவிட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்