உ.பி.யில் 35 வயது பெண் வெட்டி கொலை..கணவர்,மாமியார் தலைமறைவு.!

Default Image

உத்தரபிரதேசத்தின், ஃபதேபூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் 35 வயது பெண் ஒருவர் வெட்டிக் கொல்லப்பட்டதாக கூறபடுகிறது.

இதனையடுத்து, கொலை செய்யப்பட்டவர் “ரீட்டா” என தெரிய வந்துள்ளது. மேலும், உயிரிழந்த அந்த பெண்ணின் சடலம் வனப்பகுதியில் கண்டெடுக்கப்பட்டதாக காவல்துறை ஒருவர் தெரிவித்தார்.

இந்நிலையில், உயிரிழந்த பெண்ணின் பெற்றோர்கள் அளித்த புகாரின் பேரில் கொலை செய்யப்பட்ட பெண்ணின் கணவர் ஜெய் பிரகாஷ் மற்றும் அவரது மாமியார் ஆகியோர் ரீட்டாவைக் கொன்றதாக இவர்கள் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது என்று ஃபதேபூர் காவல் துறையினர் தெரிவித்தனர்.

அதன்படி, காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருவதாகவும், தலைமறைவாக உள்ள குற்றவாளிகளை கைது செய்ய முயற்சி செய்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்