இனி நடிகர்கள் முதல்வராக முடியாது , விவசாயிகள் தான் முதல்வர்கள் – கருப்பண்ணன்!

Default Image

இனி நடிகர்கள் முதல்வராக முடியாது , விவசாயிகள் தான் முதல்வர்கள் ஆக முடியும் என கருப்பண்ணன் தெரிவித்துள்ளார்.

ஈரோடு மாவட்டத்தில் நாற்பத்தி ஒன்பதாவது ஆண்டு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் துவக்க விழாவும் மாற்றுக் கட்சியினர் கழகத்தில் இணையும் விழாவும் நடைபெற்றது. இந்த விழாவில் கலந்து கொண்ட ஈரோடு மாவட்டத்தின் புறநகர் மாவட்ட கழக செயலாளரும், தமிழகத்தின் சுற்றுச்சூழல் துறை அமைச்சருமாகிய  கருப்பண்ணன் அவர்கள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கொடியை ஏற்றிய பிறகு மேடையில் மக்களுக்கு உரையாற்றினார்.

அப்போது பேசிய அவர் ஜெயலலிதா எம்ஜிஆருக்கு பிறகு தமிழகத்தில் நடிகர்கள் முதல்வராக முடியாது எனவும், ரஜினி போன்றவர்கள் முதல்வராக முயற்சிப்பது தங்களது படத்தை ஓட வைக்க தான், 50 கோடி ரூபாய் சம்பாதித்த பிறகு அவர்கள் ஆஸ்திரேலியா சென்று விடுவார்கள் எனவும் இனி தமிழகத்தில் நடிகர்கள் முதல்வராக முடியாது. விவசாயிகள் மட்டுமே முதல்வராக முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்