#IPL2020: 177 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்த மும்பை..!

இன்றைய 36-வது போட்டியில் மும்பை இந்தியன்ஸ் Vs கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதி வருகிறது. இப்போட்டி துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி பேட்டிங் தேர்வு செய்தது.

மும்பை அணியின் தொடக்க வீரர்களாக ரோஹித் சர்மா, குயின்டன் டி காக் இருவரும் களமிறங்கினர். ஆட்டம் தொடக்கத்திலே ரோஹித் சர்மா 9 ரன்னில் வெளியேறினார். பின்னர், இறங்கிய சூர்யகுமார் யாதவ் ரன் எடுக்காமல் விக்கெட்டை இழந்தார்.

இதைத்தொடர்ந்து, இறங்கிய  இஷான் கிஷன், ஹர்திக் பாண்டியா சொற்ப ரன்களில் வெளியேற சிறப்பாக விளையாடி வந்த குயின்டன் டி காக் அரைசதம் அடித்து 53 ரன்னில் பெவிலியன் சென்றார். மத்தியில் இறங்கிய குருனல் பாண்டியா நிதானமாக விளையாடி  34 ரன் எடுத்தார். இறுதியாக மும்பை அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டை இழந்து 176 ரன்கள் எடுத்தனர்.

177 ரன் இலக்குடன் பஞ்சாப் அணி களமிறங்க உள்ளது. கடைசிவரை பொல்லார்ட் 34 , நாதன் கூல்டர் 24 ரன்களுடன் களத்தில் நின்றனர்.

author avatar
murugan