தங்க கடத்தல்…சிவசங்கர் மருத்துவமனையில் அனுமதி..!

Default Image

கேரளாவின் கடந்த ஜூலை மாதம் 5-ம் தேதி 30 கிலோ தங்கத்தை சுங்க துறை அதிகாரிகள் கைப்பற்றினர். இந்த விசாரணையில், தூதரக முன்னாள் ஊழியர் ஸ்வப்னா சுரேஷ்-க்கு தொடர்பு இருப்பது தெரிய வந்தது. இதனால், ஸ்வப்னா சுரேஷ், சந்தீப் நாயர் உட்பட 20 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

தங்க கடத்தல் தொடர்பாக கேரள முதல்வர் பினராயி விஜயன் முதன்மை செயலாளராக இருந்த சிவசங்கர் என்பவருக்கும் தொடர்பு இருப்பதாக கூறப்பட்டது.பின்னர், அவரிடம் விசாரணை நடைபெற்றது. இதனை தொடர்ந்து அவர் பதவி நீக்கம் செய்யப்பட்டார்.

தற்போது, சிவசங்கர் முன் ஜாமீன் கோரியுள்ளார். அவரது மனு வருகிற 23-ம் தேதி விசாரணைக்கு ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது. அதுவரை கைது செய்ய தடை விதிக்கப்பட்டு உள்ளது. என்.ஐ.ஏ சிறப்பு நீதிமன்றத்தால் 10 பேருக்கு நேற்று முன்தினம் ஜாமீன் வழங்கப்பட்டது.

3 பேரின் ஜாமீன் மனு நிராகரிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில், தங்கக் கடத்தல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள கேரள முதல்வரின் முன்னாள் முதன்மைச் செயலாளர் சிவசங்கர் திடீர் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சுங்கத்துறையினரால் விசாரணைக்கு அழைக்கப்பட்டிருந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிபட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்