என்கவுண்ட்டர்…போது தாகம்! தண்ணீர் கொடுத்த ராணுவம்-மனிதநேயத்திற்கு பாராட்டு

Default Image

கடும் துப்பாக்கிச்சண்டைக்கு மத்தியிலும் சரண் அடைந்த தீவிரவாதிக்கு  தண்ணீர் கொடுத்த  இந்திய ராணுவ வீரர்களின் மனித நேயத்தை பலரும் பாராட்டி வருகின்றனர்.

ஜம்மூ காஷ்மீர் யுனியன் பிரதேசத்தில் ராணுவத்தினர் மற்றும் தீவிரவாதிகளுக்கு இடையே கடும் துப்பாக்கி சண்டை நடைபெற்றது.இச்சண்டையில் ஜஹாங்கீர் (வயது31) என்ற தீவிரவாதி ராணுவத்தினரிடன் சரண் அடைந்தான்.

இந்நிலையில் கடும் துப்பாக்கி சண்டைக்கு இடையே மீண்டும் தீவிரவாதி திருந்த ஒரு வாய்ப்பளித்த இந்திய ராணுவ வீரர்கள் அவனுக்கு தண்ணீர் கொடுத்தனர்.

சரண் அடைந்த தீவிரவாதியின் தந்தை ராணுவ வீரர்களின் கால்களில் விழுந்து தன் மகனுக்கு உயிர்பிச்சை கொடுத்ததற்கு நன்றி என்று கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தார்.இந்த வீடியோ சமூகவலைதளங்கள் அதிவேகமாக பரவி வருகிறது.


	

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்