கொரோனா சிகிச்சைக்கு பயன்படுத்தபட்ட ரெம்டெசிவிர் மருந்தால் எந்த பலனும் இல்லை! ஆய்வில் வெளியான தகவல்!

Default Image

கொரோனா சிகிச்சைக்கு பயன்படுத்தபட்ட ரெம்டெசிவிர் மருந்தால் எந்த பலனும் இல்லை.

உலகம் முழுவதும் கொரோனா வைராஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த மருந்து கண்டுபிடிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், கடந்த ஆறு மாதமாக, ரெம்டெசிவிர், லோபினாவிர் -ரிட்டோனாவிர், இன்டர்பெரான் பீடா 1 ஏ மற்றும் ஹைட்ரோ குளோரோகுயின் ஆகிய நான்கு மருந்துகள் குறித்து நடந்த ஆய்வில், இவை அனைத்தும் கொரோனா சிகிச்சைக்கு ஏற்ற மருந்துகள் இல்லை என தெரிய வந்துள்ளது.

மேலும், ரெம்டெசிவிர் மருந்தை, ஆரம்பக்கட்ட கொரோனா அறிகுறி உள்ளவர்கள் முதல் கொரோனாவுக்கு தீவிர சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள் வரை அனைவருக்கும் கொடுத்து ஆய்வு செய்ததில், அவர்களின் உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை என ஆய்வில் தெரிய வந்துள்ளது.

இந்த ஆய்வில் 30 நாடுகளில் இருந்து 11 ஆயிரம் பேர் கலந்து கொண்டனர். இதில் கலந்து கொண்டவர்களில் 937 பேர் இந்தியர்கள். இதனையடுத்து, இந்த ஆய்வில் கலந்து கொண்ட அனைவருக்கும் இந்திய மருத்துவ கவுன்சில் நன்றி தெரிவித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்