நீட் தேர்வில் குளறுபடி! தேர்வு எழுதியவர்களை விட தேர்ச்சியடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகம்!

Default Image

நீட் தேர்வு குறித்து தேசிய தேர்வு முகமை வெளியிட்ட புள்ளிவிவரங்களில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

நீட் நுழைவுத் தேர்வு கடந்த  செப்டம்பர் 13ம் தேதி நடத்தப்பட்டது. இந்த தேர்வுக்கு  நாடு முழுவதிலும் இருந்து 15 லட்சத்து 97 ஆயிரம் பேர் எழுத பதிவு செய்திருந்தனர். பின் செப்டம்பர் 13ம் தேதி நடந்த நீட் தேர்வில் நாடு முழுவதும் 14 லட்சத்து 37 ஆயிரம் பேர் பங்கேற்றனர்.

இந்நிலையில், நீட் தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், நீட் தேர்வு முடிவுகள் குறித்து, தேசிய தேர்வு முகமை வெளியிட்ட புள்ளிவிவரங்களில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, திரிபுராவில், 3,536 பேர் தேர்வு எழுதிய நிலையில், 88,889 பேர் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த குளறுபடியால் பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் குழப்பம் அடைந்துள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்