சர்ச்சைக்குரிய படத்தில் இருந்து விஜய் சேதுபதி வெளியேற வேண்டும் -திருமாவளவன்

800 movie என்ற சர்ச்சைக்குரிய படத்தில் இருந்து விஜய் சேதுபதி வெளியேற வேண்டும் என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
நடிகர் விஜய் சேதுபதி இலங்கையின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடிக்கிறார்.இந்த படத்திற்கு “800” என பெயர் வைக்கப்பட்டுள்ளது.இந்த படத்தின் மோஷன் போஸ்டர் வெளியானது.இதில் முரளிதரன் தோற்றத்தில் நடிகர் விஜய் சேதுபதி இருப்பது போல் வெளியானது. ஆனால் இந்த படத்தில் விஜய் சேதுபதி நடிப்பதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. அதாவது,முரளிதரன் இலங்கை நடைபெற்ற போராட்டத்தில் இலங்கை அரசுக்கு ஆதரவாக செயல்பட்டவர் என்ற தமிழகத்தில் பலரும் குற்றம்சாட்டி வருகின்றனர் .
இந்நிலையில் இது குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டப்பட்டுள்ள பதிவில் , 800 movie என்ற சர்ச்சைக்குரிய படத்தில் நடிக்கவேண்டாம் என்பதை ஒரு கலைஞரின் சுதந்திரத்தில் தலையிடும் போக்கு என கருதவேண்டாம்.இது கோடிக்கணக்கான தமிழர்களின் ஆறாத பெருவலி. அந்த பாத்திரத்தில் சிங்களவன் நடித்தால் யாரும் கொதிக்கப் போவதில்லை.விஜய் சேதுபதி இதை உணர்ந்துவெளியேற வேண்டும்.இவ்வாறு தெரிவித்துள்ளார்.
#800movie: சர்ச்சைக்குரிய படத்தில் நடிக்கவேண்டாம் என்பதை ஒரு கலைஞரின் சுதந்திரத்தில் தலையிடும் போக்கு என கருதவேண்டாம்.
இது கோடிக்கணக்கான தமிழர்களின் ஆறாத #பெருவலி. அந்த பாத்திரத்தில் சிங்களவன் நடித்தால் யாரும் கொதிக்கப் போவதில்லை.
@VijaySethuOffl இதை உணர்ந்துவெளியேற வேண்டும். pic.twitter.com/TikMa7awt3
— Thol. Thirumavalavan (@thirumaofficial) October 15, 2020
லேட்டஸ்ட் செய்திகள்
CSK vs SRH : தோல்வியில் இருந்து மீளுமா சென்னை? டாஸ் வென்ற ஹைதராபாத் பந்துவீச்சு தேர்வு!
April 25, 2025
“ஆமாம்., நாங்கள் பயங்கரவாதிகளுக்கு ஆதரவு அளித்தோம்!” பாகிஸ்தான் அமைச்சர் பரபரப்பு பேட்டி!
April 25, 2025