டாஸ்மாக் தேர்தல் வாக்குறுதியை ஆளுங்கட்சி நிறைவேற்றியதா..? நீதிமன்றம் கேள்வி.!

Default Image

தமிழகத்தில் 2016-ம் ஆண்டு முதல் எத்தனை டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன என்பது குறித்து தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு.

புதுக்கோட்டை சார்ந்த கருப்பையா என்பவர் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், அரசர்குளம் கிராமத்தில் இயங்கி வந்த டாஸ்மாக் கடை பொதுமக்கள் எதிர்ப்பு காரணமாக மூடப்பட்டது.

தற்போது அந்த கடையை அறந்தாங்கி- காரைக்குடி நெடுஞ்சாலையில் சோதனைச் சாவடி அருகே திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இப்பகுதியில் பள்ளிகள், கோயில்கள் உள்ளன. இங்கு கடை திறந்தால் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படும் எனவே டாஸ்மாக் திறக்க தடை விதிக்க வேண்டும் என கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக தேர்தல் அறிக்கையில் தமிழகத்தில்  5 ஆண்டுகளில் படிப்படியாக டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என்ற தேர்தல் வாக்குறுதியை ஆளுங்கட்சி நிறைவேற்றியதா..? என கேள்வி எழுப்பினர்.

மேலும், 2016-ம் ஆண்டு எத்தனை டாஸ்மாக் கடைகள் இருந்தன..? 2017, 18, 19ம் ஆண்டுகளில் எத்தனை கடைகள் மூடப்பட்டன..? தற்போது எத்தனை டாஸ்மாக் கடைகள் உள்ளன..? அதன் மூலம் வருவாய் எவ்வளவு வருகிறது..?  என்பது குறித்து தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

மேலும், வழக்கை வருகின்ற நவம்பர் 8-ம் தேதி ஒத்திவைத்தும், அறந்தாங்கி- காரைக்குடி நெடுஞ்சாலையில் சோதனைச் சாவடி அருகே திறக்க இடைக்கால தடை விதித்தது.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்