மெகபூபா முஃப்தி விடுவிக்கப்பட்டதை அறிந்து  நான் மகிழ்ச்சியடைகிறேன்- மு.க.ஸ்டாலின்

Default Image

மெகபூபா முஃப்தி 14 மாதங்களுக்குப் பிறகு காவலில் இருந்து விடுவிக்கப்பட்டதை அறிந்து  நான் மகிழ்ச்சியடைகிறேன் என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதை தொடர்ந்து, அங்கு பதற்றமான சூழ்நிலை நிலவியது. எனவே, அசம்பாவிதச் சம்பவங்களை தவிர்ப்பதற்காக தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு,அங்குள்ள முக்கிய அரசியல் கட்சித் தலைவர்கள் கைது செய்ய்யப்பட்டு அதன் பிறகு, பரூக் அப்துல்லா, உமர் அப்துல்லா உள்ளிட்ட தலைவர்கள் விடுதலை செய்யப்பட்டனர். அந்தவகையில் ஜம்மு&காஷ்மீரின் முன்னாள் முதல்வரும், பிடிபி கட்சித் தலைவருமான மெகபூபா முஃப்தியும் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டனர்.இதனிடையே 14 மாதங்களாக சிறையில் அடைக்கப்பட்டிருந்த மெகபூபா முஃப்தி தற்போது விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில் இது குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ள பதிவில்,மெகபூபா முஃப்தி 14 மாதங்களுக்குப் பிறகு காவலில் இருந்து விடுவிக்கப்பட்டதை அறிந்து  நான் மகிழ்ச்சியடைகிறேன்.
மற்ற அரசியல் கைதிகளையும் விடுவிக்குமாறு நான் அரசை  கேட்டுக்கொள்கிறேன்.இந்த நேரத்தில் இடைநிறுத்தப்பட்ட ஜனநாயக செயல்முறைகளும் மீண்டும் நிலைநிறுத்தப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்