அக்.,25-ல் தொடங்கும் வடகிழக்கு பருவமழை..!முன்னெச்சரிக்கை விறுவிறு

Default Image

வடகிழக்கு பருவமழை வரும் 25-ஆம் தேதிக்குப் பிறகு தொடங்குவதற்கான வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.

தென்னிந்தியவில் தற்போது தென்மேற்கு பருவமழையின் சூழல் தொடங்க உள்ளது என்றும் வடகிழக்கு பருவமழை அக்.,25ம் தேதிக்குப் பிறகு தொடங்குவதற்கு வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் கூறியுள்ளார்.

இந்நிலையில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து தலைமைச்செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மூத்த அமைச்சர்கள், உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.இதில் பேசிய முதலமைச்சர், பருவமழை காலங்களில் மக்கள் பாதிக்கப்படாமல் இருப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் அரசு மேற்கொண்டு உள்ளதாக குறிப்பிட்டார். பருவமழையை கையாள தமிழக அரசு தயாராக உள்ளதாக தகவல் தெரிவித்தார்.


	

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்