முன்னாள் முதல்வரை தோற்கடிக்க ஒரு பாஜக உறுப்பினர் போதும் – முதல்வர் கட்டார்

ஹரியானா மாநிலத்தில் வருகின்ற பரோடா சட்டசபை இடைத்தேர்தலில் முன்னாள் முதல்வர் பூபிந்தர் சிங் ஹூடாவை தோற்கடிக்க ஒரு சாதாரண பாஜக உறுப்பினரே போதும் என்று ஹரியானா முதல்வர் எம்.எல் கட்டார் இன்று தெரிவித்தார்.

அடுத்த மாத நடைபெறவுள்ள, பரோடா சட்டமன்ற இடைத்தேர்தலில் அவருக்கு எதிராக போட்டியிட ஹூடா துணிந்த சில நாட்களுக்குப் பிறகு கட்டார் இந்த கருத்துக்களை தெரிவித்தார்.

இதற்கிடையில், வருகின்ற நவம்பர் -3 ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ள பரோடா சட்டமன்றத்திற்கான வேட்பாளர்களை பாஜகவும், காங்கிரசும் இன்னும் அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.