16-வது பிரசவத்தின் போது தாயும், சேயும் உயிரிழந்த பரிதாபம்!

Default Image

16-வது பிரசவத்தின் போது தாயும், சேயும் பரிதாபமாக உயிரிழப்பு.

மத்தியபிரதேசம் மாநிலம், தாமோ மாவட்டத்தின் பதாஹிர் கிராமத்தை சேர்ந்தவர் சுக்ரானி (45). இவருக்கு 15 குழந்தைகளை பெற்றேடுத்த நிலையில், 4 ஆண்குழந்தையும், 4 பெண் குழந்தையும் மட்டுமே உயிருடன் உள்ளனர். மீதம் 7 குழந்தைகளும் பிறந்து சில மணி நேரங்கள், நாட்கள், மாதங்களில் இறந்துவிட்டனர்.

இந்நிலையில், இப்பெண் தனது 16-வது பிரசவத்திற்காக, அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவருக்கு நேற்று ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதனையடுத்து குழந்தை பிறந்து சில மணி நேரத்திலேயே, தாயும், சேயும் வீட்டிற்கு அனுப்பப்பட்டனர். ஆனால், தாயும், சேயும் இறந்துவிட்டதாக, அப்பெண்ணுக்கு மருத்துவம் பார்த்த பெண் ஊழியர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அப்பெண் ஊழியர் கூறுகையில், ‘பிரசவத்தின் போது அந்த பெண்ணுக்கு ஏற்பட்ட மோசமான உடல்நிலையால் சோர்வுற்று இருந்தார். அதனால், குழந்தையையும், தாயையும் காப்பாற்ற முடியவில்லை. அப்பெண் 16-வது முறையாக தாயாகி தற்போது இறந்துவிட்டார்.’ என தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்