இன்று முதல் தங்க பத்திரம் முதலீடுக்கு விண்ணப்பிக்கலாம்!!

Default Image

ரிசர்வ் வங்கி வெளியிடும் தங்கப்பத்திரத்தில் முதலீடு செய்ய இன்று முதல் அக்,.16 வரை விண்ணப்பிக்கலாம்.

ரிசர்வ் வங்கி வெளியிடும் தங்கப்பத்திரத்தில் ஒரு கிராம் ஐயாயிரத்து 51 ரூபாய் என்ற விலையில் முதலீடு செய்யலாம்.இந்தப் பத்திரங்களில் முதலீடு செய்வதற்குப் பொதுத்துறை வங்கிகள், குறிப்பிடத் தக்க அஞ்சலகங்களில் வெள்ளிக்கிழமை வரை விண்ணப்பிக்கலாம்.
மேலும் இணையத்தள வழி விண்ணப்பித்துப் பணம் செலுத்துவோர் ஒரு கிராமுக்கு ஐயாயிரத்து ஒரு ரூபாய் செலுத்தினால் போதும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. தங்கப்பத்திர முதலீட்டின் முதிர்வுக்காலம் 8 ஆண்டுகள். 5 ஆண்டுகளுக்குப் பின் வட்டி வழங்கப்படும், பத்திரத்தை ஒப்படைத்து முதலீட்டைத் திரும்பப் பெற்றுக்கொள்ளும் வசதி இதில் உள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்