எங்கிருந்தாலும் மன மகிழ்ச்சியுடன் வாழ்க! – அமைச்சர் ஜெயக்குமார்

கூட்டணி கட்சியான பாஜக-வில் இணைவது மகிழ்ச்சியான விஷயம் தான்.

காங்கிரஸ் செய்தி தொடர்பாளராக இருந்த குஷ்பு, பாஜகவில் இணைய உள்ளதாக சமீப காலமாக தகவல் வெளியான நிலையில், குஷ்பூ பாஜகவில் இணையவே டெல்லி சென்றுள்ளார் என்றும் தகவல்கள் பரவி வருகிறது. இந்நிலையில், காங்கிரஸ் கட்சி, காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளர் பதவியில் இருந்து குஷ்புவை  நீக்கம் செய்வதாக அறிவித்துள்ளது.

இதனையடுத்து, அறிவிப்பு வெளியாகி சில நிமிடங்களில், அக்கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்திக்கு, குஷ்பு  காங்கிரசில் இருந்து விலகுவதாக  கடிதம் எழுதியுள்ளார்.  இந்நிலையில், இதுகுறித்து அமைச்சர் ஜெயக்குமாரிடம், செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். இதற்கு பதிலளித்த அவர், ‘எங்கிருந்தாலும் வாழ்க, மனமகிழ்ச்சியோடு வாழ்க. குஷ்பூ கூட்டணி கட்சியான பாஜக-வில் இணைவது மகிழ்ச்சியான விஷயம் தான்.’ என்று தெரிவித்துள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.