எல்லையில் பதற்றத்தை தனிக்க இன்று இந்தியா-சீனா 7வது சுற்று பேச்சு…

Default Image
இந்தியாவின் கிழக்கு லடாக்கில், கடந்த மே மாதம் சீன படைகள் இந்திய எல்லை பகுதிக்குள் அத்துமீற துணிந்ததால், இந்திய-சீன படைகள் இடையே மோதல்பதற்றம் ஏற்பட்டது.இதன் விளைவாக போர் பதற்றம் கடந்த ஜூன் 15-ந் தேதி, சண்டை மூண்டது.
அதைத் தொடர்ந்து பதற்றத்தை தணிக்க இரு நாடுகளுக்கும் இடையே ராணுவரீதியிலும், அதிகாரிகள் மட்டத்திலும் பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன. இந்நிலயில், கடந்த மாதம் 10-ந் தேதி, ரஸ்யாவின் மாஸ்கோவில், இரு நாட்டு வெளியுறவுத்துறை மந்திரிகள் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது. அதில், படைகளை விரைந்து விலக்கிக்கொள்வது உள்பட 5 அம்ச உடன்பாடு ஏற்பட்டது. கடந்த மாதம் 21-ந் தேதி, இரு நாடுகள் இடையே ராணுவரீதியிலான 6-வது சுற்று பேச்சுவார்த்தை நடைபெற்றது. அதைத் தொடர்ந்து, கூடுதலாக படைகளை அனுப்பக்கூடாது, நிலைமையை சிக்கலாக்கும் எந்த காரியத்தையும் செய்யக்கூடாது என்பது உள்ளிட்ட அறிவிப்புகளை இரு நாடுகளும் வெளியிட்டன.
      இந்த நிலையில், இன்று (திங்கட்கிழமை) 7-வது சுற்று ராணுவ பேச்சுவார்த்தை நடக்கிறது. கிழக்கு லடாக்கில் இந்திய எல்லைக்குட்பட்ட சுசுல் என்ற இடத்தில் பகல் 12 மணிக்கு இந்த பேச்சுவார்த்தை நடக்கிறது.
       இந்திய தரப்புக்கு லே பகுதியை சேர்ந்த 14 படைப்பிரிவு தலைவர் லெப்டினன்ட் ஜெனரல் ஹரிந்தர் சிங் தலைமை தாங்குகிறார். லெப்டினன்ட் ஜெனரல் பி.ஜி.கே.மேனன், மத்திய வெளியுறவு அமைச்சக இணை செயலாளர் நவீன் ஸ்ரீவஸ்தவா உள்ளிட்டோர் இடம் பெறுகிறார்கள். இந்த பேச்சுவார்த்தையில் எடுத்து வைக்க வேண்டிய வாதங்களை ராணுவ மந்திரி ராஜ்நாத்சிங் தலைமையிலான உயர்மட்டக்குழு கடந்த 9-ந் தேதி கூடி முடிவு செய்து விட்டது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்