சொதப்பிய தொடக்க ஆட்டக்காரர்கள்.. ராஜஸ்தான் அணிக்கு 185 ரன்கள் இலக்கு!

Default Image

ஆர்ச்சரின் அபார பந்துவீச்சால் டெல்லி கேபிட்டல்ஸ் அணிக்கு 185 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நிர்ணயித்தது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி.

ஐபிஎல் தொடரில் 23 ஆம் போட்டி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் – டெல்லி கேபிட்டல்ஸ் அணிகள் மோதிவருகிறது. ஷார்ஜாவில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வுசெய்துள்ளது.

அதன்படி முதலில் டெல்லி அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக ப்ரித்வி ஷா மற்றும் தவான் களமிறங்கினார்கள். இவர்களின் கூட்டணியில் அணியில் ஸ்கொர் உயருமென ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், 5 ரன்களில் தவான் வெளியேறினார். அவரைதொடர்ந்து ஸ்ரேயாஸ் ஐயர் களமிறங்க, 11 ரன்களில் ப்ரித்வி ஷா தனது விக்கெட்டை இழந்தார்.

22 ரன்களில் ஸ்ரேயாஸ் ஐயர் வெளியேற, 5 ரன்கள் மட்டுமே அடித்து ரிஷப் பந்த் வெளியேறினார். அதன்பின் மார்கஸ் ஸ்டோலிஸ் – ஹெட்மேயர் கூட்டணியில் டெல்லி அணியில் ரன்கள் தொடர்ந்து உயர்ந்துகொண்டே வந்தது. 39 ரன்களில் ஸ்டோலிஸ் வெளியேற, அவரையடுத்து 45 ரன்கள் அடித்து ஹெட்மேயர் தனது விக்கெட்டை இழந்தார்.

இறுதியாக 20 ஓவர் முடிவில் டெல்லி அணி, 8 விக்கெட் இழப்பிற்கு 184 ரன்கள் அடித்தது. 185 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் தற்பொழுது ராஜஸ்தான் அணி களமிறங்கவுள்ளது. பந்துவீச்சை பொறுத்தளவில் ராஜஸ்தான் அணியின் ஆர்ச்சர் தலா 3 விக்கெட்களும், திவேத்தியா, டை மற்றும் தியாகி தலா 1 விக்கெட்டை வீழ்த்தினார்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்