ஆந்திராவில் ஒரே நாளில் 5,145 பேருக்கு கொரோனா!

Default Image

ஆந்திராவில் கொரோனா தொற்றால் மேலும் 5,145 பேர் பாதிக்கப்பட்டதாக அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஆந்திராவில் கொரோனா வைரஸின் தாக்கம் குறைய தொடங்கியது. அந்தவகையில் இன்று ஒரே நாளில் 5,145 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7,44,864 ஆக அதிகரித்துள்ளது.

அங்கு மேலும் 31 பேர் உயிரிழந்துள்ள நிலையில், உயிரிழப்பு எண்ணிக்கை 6,159 ஆக அதிகரித்துள்ளது. இன்று ஒரே நாளில் 6,110 பேர் தொற்றிலிருந்து மீண்டு வீடு திரும்பிய நிலையில், 6,91,040 பேர் குணமடைந்து வீடு திரும்பினார்கள். அதுமட்டுமின்றி, 47,665 பேர் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருவதாக அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்