மகாராஷ்டிராவில் மேலும் 13,395 பேருக்கு கொரோனா!

Default Image

மகாராஷ்டிராவில் மேலும் 13,395 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் பொறுத்தவரை, மகாராஷ்டிராவில் தான் கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது. தற்பொழுது குறையத் தொடங்கிய நிலையில், இன்று ஒரே நாளில் 13,395 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.

இதனால் அங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 14,93,884 ஆக உயர்ந்தது. மேலும், அம்மாநிலத்தில் கொரோனாவால் இன்று 358 பேர் உயிரிழந்த நிலையில், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 39,430 ஆக அதிகரித்துள்ளது.

அங்கு 15,575 பேர் குணமடைந்து வீடு திரும்பியதால், குணமடைந்தோரின் எண்ணிக்கை 11,96,441 ஆக உயர்ந்துள்ளது. அதுமட்டுமின்றி, மகாராஷ்டிராவில் 2,41,986 பேர் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருவதாக அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்