தூத்துக்குடி குலசை தசரா திருவிழா..நாளொன்றுக்கு 8,000 பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி.!

Default Image

தூத்துக்குடி மாவட்டத்தின் குலசை தசரா திருவிழா கொடியேற்றம் வருகின்ற 17 ம் தேதி தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், 17-ம் தேதி தொடங்குகின்ற திருவிழா 27-ம் தேதி நிறைவடைகிறது என தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப்நந்தூரி தெரிவித்துள்ளார்.

மேலும், கொரோனா மற்றும் ஊரடங்கு காரணமாக இந்த ஆண்டு அதிகமான மக்கள் கூடுவதை கருத்தில் கொண்டு வெளி மாநிலம் மற்றும் மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் வர அனுமதி இல்லை என ஆட்சியர் தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறுகையில், தசரா திருவிழாவின் சூரசம்ஹாரம் நிகழ்ச்சியில் பக்தர்கள் பங்கேற்க தடை விதிக்கப்ட்டுள்ளது. அதே போல், கோவில் வளாகத்தில் பக்தர்கள் தங்குவதற்கு அனுமதி கிடையாது.

இதனால், வேசம் அணியும் பக்தர்கள் அனைவரும் அந்தந்த மாநிலம் மற்றும் மாவட்டங்களில் முடித்து கொல்லமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இதற்கிடையில், நாளொன்றுக்கு 8,000 பக்தர்களுக்கு மட்டுமே சுவாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

 

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்