ஆளாளுக்கு ஒரு கருத்தைச் சொல்வதற்கு, நாங்கள் கருத்துச் சொல்ல தயாராக இல்லை- ஜெயக்குமார்..!

Default Image

 பாஜகவில் ஆளாளுக்கு ஒரு கருத்து கூறுகிறார்கள், இதற்கு கருத்து கூற முடியாது அமைச்சர் ஜெயக்குமார்.

பாஜக, திமுகவுடன் கூட கூட்டணி அமைக்கலாம் எனநேற்று  பொன்.ராதாகிருஷ்ணன் கூறி இருந்தார். இது குறித்து,  சென்னையில் இன்று செய்தியளர்களிடம் பேசிய மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், இதை பாஜகவின் கருத்தாக எடுத்துக்கொள்ள முடியாது. பாஜக மாநிலத் தலைவர்,  பொறுப்பாளராக உள்ள அகில இந்தியத் தலைவர்கள் சொன்னால்தான் நாங்கள் எங்களின் கருத்தைச் சொல்ல முடியும்.

#BREAKING: தேர்தல் நெருங்க நெருங்க கூட்டணி மாறலாம்.. பொன் ராதாகிருஷ்ணன்..!

பாஜகவில் உள்ளவர்கள் ஆளாளுக்கு ஒரு கருத்தைச் சொல்வதற்கு, நாங்கள் எங்கள் கருத்தைச் சொல்வதற்குத் தயாராக இல்லை.எங்களை பொறுத்தவரை கூட்டணியை மதிப்பவர்கள் நாங்கள். திமுகவை பொறுத்தவரை தெரியும் எந்த அளவிற்கு கூட்டணிக் கட்சிகளை மதிக்கிறார்கள் என்பது, சமீபத்தில் திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன், கூட்டணியில் இருப்பவர்களை ஒருமையில் பேசினார். அந்தப் மாதிரி நான் பதில் சொல்ல விரும்பவில்லை என கூறினார்.

தமிழகத்தைக் கொள்ளையடித்தது திமுகதான் என அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்