#Breaking: துணை முதல்வர் வீட்டிற்கே நேரில் சென்று நன்றி கூறிய முதல்வர்!

Default Image

துணை முதல்வர் மற்றும் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தை சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள அவரது இல்லத்தில் முதலமைச்சர் பழனிசாமி சந்தித்தார்.

அதிமுகவில் 50 நாட்களாக ஏற்பட்ட குழப்பம், இன்று முடிவுக்கு வந்துள்ளது. அந்த வகையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த ஈபிஎஸ் – ஓபிஎஸ், 2021-ல் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில், அதிமுகவின் முதலமைச்சர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி அவர்களை அதிகாரபூர்வமாக ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.

இதனையடுத்து அதிமுக தொண்டர்கள் பட்டாசு வெடித்து, இனிப்புகளை வழங்கி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர். மேலும், அவர்களுக்கு பல தலைவர்கள் வாழ்த்துக்கள் தெரிவித்து வந்தனர். இந்நிலையில் முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்தார்.

அவரை பூங்கோத்து கொடுத்து வரவேற்றார் ஓ.பன்னீர்செல்வம். மேலும், அதிமுக கட்சியின் முதல்வர் வேட்பாளராக தன்னை அறிவித்ததற்கு நன்றி தெரிவித்தார். அதுமட்டுமின்றி, முதல்வரிடம் அதிமுக எம்.பி. மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகனான ரவீந்திரநாத், ஆசிபெற்றார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Live Tamil News
Tamilnadu CM MK Stalin
tn rain
Kerala CMO bomb threat
PUDUCHERRY'
16 Youtube channels block
TN CM MK Stalin