#Breaking: விஜயகாந்த் மீண்டும் மருத்துவமனையில் அனுமதி!

Default Image

உடல்நலக்குறைவு காரணமாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கடந்த சில தினங்களுக்கு முன் தேமுதிக தலைவர் விஜயகாந்திற்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு, தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார். அவரைதொடர்ந்து அவரின் மனைவியும், பிரேமலதா விஜயகாந்திற்கும் கொரோனா தொற்று உறுதிசெய்யப்ட்டதை அடுத்து அவரும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

இருவரும் கடந்த 2 ஆம் தேதி மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார்கள். இந்நிலையில், தேமுதிக தலைவர் விஜயகாந்திற்கு கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், தற்பொழுது உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்