சாலையோர உணவு விரும்பும் வடிக்கையாளர்களுக்காக ஸ்விக்கி அறிவித்துள்ள புதிய சலுகை!

சாலையோர உணவு விரும்பும் வடிக்கையாளர்களுக்காக ஸ்விக்கி அறிவித்துள்ள புதிய சலுகை அறிமுகப்படுத்தியுள்ளது.

தற்போதைய நவீன காலகட்டத்தில் மக்களும் காலத்திற்கேற்ப மாறிக்கொண்டே வருகின்றனர். வீட்டில் சமைத்து சாப்பிட கூடிய காலம் போய் தற்போது ஆன்லைனில் ஆர்டர் செய்த ஐந்தே நிமிடத்தில் வாங்கி சாப்பிடக் கூடிய காலம் வந்துவிட்டது. இந்நிலையில் பிரபலமான ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனமான ஸ்விக்கி இந்தியா முழுவதிலும் பல்வேறு உணவு வகைகளை ஆன்லைன் மூலமாக வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்து வருகிறது. இந்நிலையில் சாலையோர உணவகங்களில் விரும்பக்கூடிய வாடிக்கையாளர்கள் சாலையோரம் சென்று தான் வாங்க முடியும். இந்த வாடிக்கையாளர்களை கருத்தில் கொண்டு, தற்போது கொரோனா ஊரடங்கால் சாலையோர உணவகங்கள் மூடப்பட்ட நிலையில் இருப்பதால் ஸ்விக்கி நிறுவனம் மேம்பாட்டிற்காக மத்திய அரசு அந்நிறுவனத்துடன் கைகோர்த்து உள்ளது. இதில் ஒன்றாக சாலை ஓர உணவுகள் இனி ஸ்விக்கியிலும் கிடைக்கும் என புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இதில் முதல்கட்டமாக சென்னை, டெல்லி, அகமதாபாத் உள்ளிட்ட இந்தியாவின் முக்கியமான நகரங்களில் உள்ள சாலையோர உணவுகளுடன் இந்த ஆன்லைன் மூலமாக உணவு டெலிவரி செய்யும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதனால் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட சாலையோர உணவக உரிமையாளர்கள் பயன் பெறுவதுடன் மக்களும் வீட்டில் இருந்தபடியே சாலையோர உணவைப் பெற முடியும் என கூறப்பட்டுள்ளது.

author avatar
Rebekal