“ஹத்ராஸ் விவகாரத்தில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சியினர் தான் காரணம்” என போஸ்டர் ஒட்டிய பாஜக!

ஹத்ராஸ் சம்பவத்திற்கு காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியினர் தான் காரணம் என குமரி மாவட்ட பாஜகவினர் போஸ்டர் ஓட்டினார்கள்.

உத்தரப்பிரதேச மாநிலம், ஹத்ராஸ் கிராமத்தில் உள்ள தலித் பெண்ணை உயர் ஜாதியை சேர்ந்த நான்கு ஆண்கள் கும்பலாக பாலியல் பலாத்காரம் செய்தனர். இதற்கு இரங்கல் தெரிவிக்கும் விதமாக குமரி மாவட்ட மாவட்ட பாஜகவினர் போஸ்டர் ஓட்டினார்கள். அந்த போஸ்டரில் இந்த விவகாரத்தில் “காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியினரால் படுகொலை செய்யப்பட்ட” என குறிப்பிட்டிருந்தனர்.

பாஜகவினரின் இந்த செயல் சர்ச்சைக்குள்ளான நிலையில், பொய் பிரச்சாரம் செய்யும் பாஜகவினர் மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரி, தி.மு.க எம்எல்ஏ மனோதங்கராஜ் தலைமையில் காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியினர் கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் மனு அளித்தனர்.