பொறியியல் கலந்தாய்வு சிறப்பு பிரிவு மாணவர்கள் – நாளை இறுதி ஒதுக்கீட்டு ஆணை!

Default Image

பொறியியல் கலந்தாய்வு சிறப்பு பிரிவு மாணவர்களுக்கு நாளை இறுதி ஒதுக்கீட்டு ஆணை வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இணைய வழி மூலமாக பொறியியல் படிக்க கூடிய மாணவர்களில் சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு அக்டோபர் 1ஆம் தேதி தொடங்கியது. இந்நிலையில் தமிழகத்தில் பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வில் பங்கேற்று கொண்ட சிறப்பு பிரிவு மாணவர்களுக்கான இறுதி ஒதுக்கீட்டு ஆணை நாளை வழங்கப்பட உள்ளது. இந்நிலையில், விளையாட்டு வீரர்கள், முன்னாள் ராணுவத்தின் வாரிசுகள், மாற்றுத் திறனாளிகள் என இந்த சிறப்பு பிரிவினரில் 2413 மாணவர்கள் பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டதாகவும், அதில் 1300 பேர் வரை முன்பதிவு கட்டணத்தை செலுத்தி விருப்பமான கல்லூரிகள் மற்றும் பாடப்பிரிவுகளை தேர்ந்தெடுத்து உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் மாணவர்களுக்கான தற்காலிக ஒதுக்கீடு பட்டியல் இன்று வெளியிடப்படும், நாளை இறுதி ஒதுக்கீட்டு ஆணை வெளியிடப்படுவதாக சிறப்பு கலந்தாய்வில் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்கள் உள்ளதாகவும், அதில் 6 ஆயிரம் இடங்கள் காலியாக கூடிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்