4 ஆண்களால் ஹரியானா குருகிராமில் 25 வயது பெண் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார்!

Default Image

4 ஆண்களால் ஹரியானாமாநிலத்தில் உள்ள குருகிராமில் 25 வயது பெண் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார்.

ஹரியானா மாநிலத்திலுள்ள குருகிராமில் உள்ள குர்கான் டிஎல்எப் எனும் கட்டிடத்தின் 2-வது மாடியில் 25 வயதுடைய பெண்ணொருவர் 4 ஆண்களால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். இந்த நான்கு ஆண்களுமே 20 முதல் 25 வயதுக்கு உட்பட்டவர்களாக தான் இருப்பதாக உதவி போலீஸ் கமிஷனர் கரண் அவர்கள் தெரிவித்துள்ளார். மேலும் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அந்தப் பெண்ணை பலாத்காரம் செய்யப்பட்டதாக கூறப்படும் 4 பேரில்  3 பேர் டெலிவரி செய்ய கூடிய சிறு வயது உடையவர்கள் எனவும் கூறப்படுகிறது. இந்நிலையில் பெண்ணை பலாத்காரம் செய்த 4 பேரும் தற்போது போலீசாரால் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட நான்கு பேரில் ஒருவர் தான் சனிக்கிழமை இரவு மெட்ரோ ரயில் நிலையம் அருகே அந்த பெண்ணை சந்தித்து ஒரு ரியல் எஸ்டேட் அலுவலகத்துக்கு அழைத்து சென்றதாகவும், அதன் பின் தனது நண்பர்களை வரவழைத்து இவ்வாறான குற்றத்தை நடத்தி இருக்கலாம் எனவும் போலீசார் சந்தேகிக்கின்றனர். இதுகுறித்து தீவிர விசாரணை கைது செய்யப்பட்டவர்களிடம் நடைபெற்று வருகிறது. மேலும் அப்பெண்ணின் தலையில் காயம் ஏற்பட்டதற்கான காரணம் என்ன என்பது குறித்தும் விசாரிக்கப்பட்டு வருகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்