அரசியலில் அடுத்த கட்டத்திற்கு செல்லும் பிரியங்கா… காங்,. தொண்டகள் உற்சாகம்…

Default Image

தலைநகர் தில்லியில் உள்ள அரசு பங்களாவிலிருந்து வெளியேறிய, காங்கிரஸ் கட்சியின்  பொதுச் செயலர் பிரியங்கா, வாடகை வீட்டில் குடியேறியுள்ளார்.

இந்நிலையில், அவர் விரைவில் உத்தரப்பிரதேச தலைநகர் லக்னோவிற்கு சென்று, அங்கேயே வாடகைக்கு வீடு எடுத்து தங்கவும் முடிவு செய்து உள்ளார்.
வரும், 2022ல், உத்திரபிரதேச மாநில  சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் ஆட்சியைப் பிடிக்கவே, அங்கு அவர் முகாமிட முடிவு செய்துள்ளதாக, காங்கிரஸ் வட்டாரங்கள் கூறுகின்றன. தற்போது, உத்தர பிரதேசத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள இளம் பெண் பாலியல் பலாத்கார சம்பவத்தில் கொதித்தெழுந்த பிரியங்கா, அம்மாநில அரசுக்கு எதிராக, தீவிர போராட்டத்தில் குதித்து உள்ளார். பிரியங்கா களத்தில் இறங்கியதும், அவருடன் ராகுல் காந்தியும் சேர்ந்து கொண்டார். மாநில அரசுக்கு எதிராக, தினமும் போராட்டம் நடத்தவும் திட்டமிட்டுள்ளார் பிரியங்கா. மற்ற எதிர்க்கட்சிகளும் பிரியங்காவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளன. ‘மேடம், ராகுலையே முந்திவிட்டார்; இவரை வைத்து தான் இனி அரசியல் நடத்த வேண்டும். காங்கிரஸ் பிழைக்க இது தான் வழி’ என்கின்றனர், கட்சியின் மூத்த தலைவர்கள்.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்