தெறிக்க விட்ட வாட்சன் – டு பிளெசிஸ் .. 10 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை வெற்றி..!

Default Image

இன்றைய 18-வது அணியில் சென்னை அணியும், பஞ்சாப் அணியும் மோதியது. இப்போட்டி, துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.

தொடக்க வீரர்களாக கே.எல்.ராகுல்,மாயங்க் அகர்வால் இருவரும் இறங்கினர். நிதானமாக விளையாடி மாயங்க் அகர்வால் 26 ரன்னில் விக்கெட்டை இழந்தார். பின்னர், இறங்கிய மந்தீப் சிங் 27 , நிக்கோலஸ் பூரன் 33 ரன்கள் எடுத்தனர்.

சிறப்பாக விளையாடிய தொடக்க வீரர் கே.எல்.ராகுல்  63 ரன்கள் குவித்தார். இறுதியாக பஞ்சாப் அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட்டை இழந்து 178 ரன்கள் எடுத்தனர்.

179 ரன்கள் இலக்குடன் சென்னை அணியின் தொடக்க வீரர்களாக ஷேன் வாட்சன், டு பிளெசிஸ் இருவரும் களமிறங்கினர். ஆட்டம் தொடக்கத்திலே இருந்து நிதானமாகவும், சிறப்பாகவும் விளையாடி வந்தனர். இதனால், ஷேன் வாட்சன், டு பிளெசிஸ் இருவரும் அடுத்தடுத்து  அரைசதத்தை நிறைவு செய்தனர்.

பின்னர், இருவரும் கடைசிவரை ஆட்டமிழக்காமல் ஷேன் வாட்சன் 83*, டு பிளெசிஸ் 87* ரன்களுடன் களத்தில நின்றனர்.  இறுதியாக சென்னை அணி 17.4 ஓவரில் விக்கெட்டை இழக்காமல் 181 ரன்கள் எடுத்து 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்