உ.பி. பாலியல் வன்கொடுமை ! நாளை நாடு தழுவிய போராட்டம் – காங்கிரஸ் அறிவிப்பு

Default Image

ஹத்ராஸ் சம்பவத்திற்கு நீதி கேட்டு காங்கிரஸ் கட்சி சார்பில் நாளை நாடு தழுவிய போராட்டம் நடத்தப்படுகிறது.

உத்திர பிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தை சார்ந்த 19 வயதான இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு பலத்த காயங்களுடன் பதினைந்து நாட்கள் டெல்லியின் சப்தர்ஜங் மருத்துவமனையில் சிகிக்சை பெற்று வந்த நிலையில், கடந்த செப்டம்பர் 29-ம் தேதி அன்று சிகிக்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்த சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்ட 4 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்திற்கு நாடு முழுவதும் பெரும் உள்ள பல அரசியல் தலைவர்கள் , சமூக ஆர்வலர்கள், பெண்கள் அமைப்பு கடும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் இந்த சம்பவத்திற்கு நீதி கேட்டு  நாளை நாடு தழுவிய போராட்டம்  நடைபெறும்  என்று காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் அறிவித்துள்ளார்.மாநிலம் மற்றும்  மாவட்ட தலைமையகங்களில் நாளை சத்தியாக்கிரக போராட்டம் நடத்தப்படும் என்றும் இந்த போராட்டத்தில் காங்கிரஸ் எம்.பிக்கள், கட்சி நிர்வாகிகள் பங்கேற்பார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்