தமிழகத்தில் இன்று மேலும் 5,477 பேருக்கு கொரோனா.!

Default Image

தமிழகத்தில் இன்று கொரோனா வைரசால் புதிதாக 5,477 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதனால் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 6,35,855 ஆக அதிகரித்துள்ளது என்று தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

அதிகபட்சமாக சென்னையில் மட்டும் இன்று 1,369 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், மொத்தம் பாதிப்பு எண்ணிக்கை 1,76,779 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவால் இன்று 67 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9,984 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனாவில் இருந்து இன்று 5,524 பேர் குணமடைந்துள்ள நிலையில், இதுவரை 5,80,736 பேர் வீடு திரும்பியுள்ளனர் என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மேலும், தற்போது 45,139 பேர் கொரோனா வார்டில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்று தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்