தமிழகத்தில் இன்று மேலும் 5,622 பேருக்கு கொரோனா.!
![Default Image](https://dinasuvadu.com/wp-content/uploads/2024/02/Logo.png)
தமிழகத்தில் இன்று கொரோனா வைரசால் புதிதாக 5,622 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இதனால் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 6,14,507 ஆக அதிகரித்துள்ளது என்று தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. அதிகபட்சமாக சென்னையில் மட்டும் இன்று 1,364 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், மொத்தம் பாதிப்பு எண்ணிக்கை 1,71,415 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனாவால் இன்று 65 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9,718 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவில் இருந்து இன்று 5,596 பேர் குணமடைந்துள்ள நிலையில், இதுவரை 5,58,534 பேர் வீடு திரும்பியுள்ளனர் என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.மேலும், தற்போது 46,255 பேர் கொரோனா வார்டில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்று தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.