அதிகரிக்கும் கொரோனா.. கேரளாவில் இம்மாத இறுதி வரை 144 தடை உத்தரவு அமல்!

கேரளாவில் இம்மாத இறுதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.
கேரளாவில் கொரோனா வைரஸ் கட்டுக்குள் வந்ததை தொடர்ந்து, அம்மாநில அரசு தொடர்ந்து சில தளர்வுகளை அறிவித்தது. ஆனால் தற்பொழுது நாள் ஒன்றுக்கு 9000க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில், கேரளா மாநில அரசு, இன்று முதல் 31 ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதில், கொரோனா அதிகம் பரவும் மாவட்டங்களான திருவனந்தபுரம், எர்ணாகுளம், கோட்டயம் ஆகிய 3 மாவட்டங்களில் கடுமையாக பின்பற்றப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த 144 தடை உத்தரவால் பொது இடங்களில் 5 பேருக்கு மேல் கூடக் கூடாது எனவும், இதனால் போக்குவரத்திற்கு எந்த வித தடையும் விதிக்கப்படவில்லை என அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.