மக்கள் தடுப்பூசியை மட்டுமே நம்பக்கூடாது – அமைச்சர் விஜயபாஸ்கர்

Default Image

சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கிண்டி கிங்ஸ் இன்ஸ்டியூட் கோவிட் மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டார். அதன் பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், தமிழகத்தில் உள்ள கிங்ஸ் இன்ஸ்டியூட் மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்கு சர்வதேச  அளவில் சிகிச்சை அளிக்கக்கூடிய பிளாஸ்மா சிகிச்சை மற்றும் உயிர்காக்கும் பிரணவாயு சிகிச்சை என உலகளாவிய சிகிச்சைகளை அளிக்க  கூடியதால் தான் 90 சதவீதம் பேர்   குணமடைந்துள்ளனர் என்று தெரிவித்துள்ளார்.

மேலும், கிங்ஸ் மருத்துவமனையை பொறுத்தவரை இங்கு 780 படுக்கைகள் உள்ளதாகவும், உயர்தரமான உணவுகள் வழங்கப்படுவதற்காகவும் கூறியுள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், உலகில் மாஸ்க் என்ற மகத்தான ஆயுதம் உள்ளது. இதை கட்டாயம் பயன்படுத்தினால் தொற்றை குறைக்க முடியும். பொது  மக்கள் ஒத்துழைப்பு அளித்தால் கண்டிப்பாக நல்ல பலன் கிடைக்கும் என்றும், மக்கள் தடுப்பூசியை மட்டுமே நம்பி இல்லாமல்,  விழிப்புடன் இருக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்