#BREAKING: தடையை மீறி கிராம சபை கூட்டம் நடத்தும் ஸ்டாலின்..!

Default Image

வழக்கமாக கிராம சபை கூட்டம் வருடத்திற்கு 4 முறை நடைபெறும். இந்தக் கூட்டத்தின் போது அந்த கிராமங்களில் நடக்கக்கூடிய பிரச்சனைகள் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு அதை அரசுக்கு அனுப்பப்படும்.

இந்நிலையில், நேற்று தமிழக அரசு சார்பில் கொரோனா பரவலால் காரணமாக கிராம சபை கூட்டங்கள் அனைத்தும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, சென்னை பூந்தமல்லி அருகே ஜமீன் கொரட்டூர் கிராமத்தில்  தடையை மீறி கிராம சபை கூட்டத்தை  திமுக தலைவர் ஸ்டாலின் நடத்தி வருகிறார்.

கிராம மக்களிடம் சமூக இடைவெளியுடன் குறைகளை கேட்டறிந்தார்.இந்த கூட்டத்தில் 100 பெண்கள் கலந்து கொண்டுள்ளனர். திருவள்ளூர் எஸ்.பி அரவிந்தன் கூறுகையில், தடையை மீறி கூட்டம் நடத்தப்பட்டுள்ளதால் வழக்கு தொடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

இந்த கூட்டத்தில் கலந்துகொண்ட ஸ்டாலின் விவசாயிகளை வஞ்சிக்கும் சட்டங்களை திரும்பப்பெறு என்ற வாசகம் அடங்கிய முக கவசம் அணிந்து உள்ளார்.

ஏற்கனவே திமுக சார்பில் விவசாயி சட்டங்கள் எதிர்ப்பு தெரிவித்து தீர்மானங்கள் நிறைவேற்ற வேண்டும் என அனைத்து திமுக சார்ந்த பஞ்சாயத்து தலைவர்களுக்கு தெரிவிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்