இன்று தென்னக காந்தியின் 45வது நினைவு தினம்-முதல்வர் புகழாரம்

Default Image

இன்று கல்விகண் திறந்த  கர்மவீரர் காமராஜர் நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.

இன்று ஒவ்வொரு பிள்ளையும் கையில் ஏடு தூக்க காரணமாக இருந்தவர்.தமிழ்நாடு மட்டுமின்றி இந்தியாவிற்கே தலைவர்களை உருவாக்கி தந்தவர்.

நாட்டிற்காக கண் துயில் கொள்ளமால் பல வருடங்கள் உண்மையாகவும், உன்னத மனிதராகவும், கடைசி காலக்கட்டத்தில் கூட நாட்டிற்காகவே உழைத்தவர் தனக்கென்று துணைக்கொண்டு வாழாமல் பாரதத்தை துணையாக கொண்டு வாழ்ந்த மாமனிதர். அரசியலில் தன் கொள்கைகளை விட்டுக்கொடுக்காமல் கடைமையாற்றிய கருப்பு காந்தி.அவரை இன்னாளில் எல்லோரும் நினைவில் கொள்வோம்.

இந்நிலையில் இன்று மேதகு காமராசரின் நினைவு தினத்தை முன்னிட்டு முதல்வர் பழனிச்சாமி தனது ட்விட்டர் பக்கத்தில் தன் வாழ்நாள் முழுமையையும் சமூகத் தொண்டாற்றூவதற்காகவே அர்ப்பணித்து தமிழகத்தை நாடே போற்றத்தக்க வகையில் உயர்த்திட்ட  கல்வித்தந்தை காமராசர் அவர்களின் நினைவு நாளில் வணங்கி மகிழ்கிறேன் என்று  பழனிசாமி புகழ்ந்துள்ளார்.

 

Image

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்