குழம்பிப் போய் நிற்கிறார் இபிஎஸ் பாவம் என்ன செய்ய?? ஸ்டாலின் கிண்டல்

Default Image

இன்று நடைபெற இருந்த கிராமசபைக் கூட்டங்களை ரத்து செய்ததற்காக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழக அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது:

இன்று நடைபெற இருந்த கிராமசபைக் கூட்டங்களை அரசு ரத்து செய்துள்ளது.ஆனால்திட்டமிட்டபடி திமுக ஊராட்சி மன்றத் தலைவர்கள் மக்களைச் சந்திப்பார்கள் என்று கூறிய அவர் கூழுக்கும் ஆசை மீசைக்கும் ஆசை என்ற நிலையை போல் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி செயல்படுவதாக ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.மேலும் அவர் கூறுகையில் உள்கட்சிப் பிரச்சினைகளின் உச்சாணிக் கொம்பில் இருந்து கொண்டு எங்க விழுந்து விடுவோமோ என்ற சோகத்தில் இருக்கிறார். கொரோனாவில் பெரிதும் குழம்பிப் போய் நிற்கிறார் பாவம் மாவட்டம் மாவட்டமாக சென்று ஆய்வுக்கூட்டம் என்ற பெயரில் முதலமைச்சர் வேட்பாளருக்காக நாணமின்றி ஆதரவு திரட்டி வருகிறார். உள்கட்சிப் பிரச்சினையில், மீள முடியாமல் ஆழமாகச் சிக்கியுள்ளார் என்று விமர்சித்துள்ளார்.


	

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்