உத்தரபிரதேசத்தில் 14 வயது சிறுமி கொடூரமாக கொலை செய்யப்பட்டார்..!

Default Image

உத்தரபிரதேசத்தில் மைனர் சிறுமி தலையில் அடிபட்டும், முகம் சிதைந்து கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார்.

உ.பி.யின் படோஹி மாவட்டத்தில் 14 வயது தலித் சிறுமி இன்று உயிரிழந்துள்ளார். உயிரிழந்த சிறுமியின் தலையில் கற்களால் அடித்தும், முகம் சிதைந்து காணப்பட்டது.

உயிரிழந்த சிறுமி, மலம் கழிக்க அருகிலுள்ள வயலுக்குச் சென்றிருந்தார். எனவும், நீண்ட நேரம் திரும்பாததால் அவரது சகோதரர் அவரைத் தேடி சென்றபோது,  அவரது உடல் ஒரு வயலில் கண்டுபிடிக்கப்பட்டது. உயிரிழந்த சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு பின் கொல்லப்பட்டார் என்று குடும்பத்தினர் கூறுகின்றனர்.

ஹத்ராஸ் இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்யவில்லை- உ.பி ஏ.டி.ஜி.பி..!

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய சூப்பிரண்டு போலீஸ் ராம் பதான் சிங், தடயவியல் வல்லுநர்கள் மற்றும் குற்றப்பிரிவு அதிகாரிகள் குழுவும் கிராமத்தில் ஆதாரங்களை சேகரித்து வருகின்றனர்.

பாலியல் பலாத்காரம் மற்றும் கொலை கோணத்தில் விசாரணை நடந்து வருவதாக தெரிவித்தார். அவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டாரா..? இல்லையா..? என்பது பிரேத பரிசோதனை அறிக்கை கிடைத்த பின்னரே தெரியவரும் என்று தெரிவித்தார்.

 

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

tamil live news
Saidai duraisamy
Carlsen Anna Cramling
Kolkata Knight Riders vs Lucknow Super Giants
tamilisai tvk vijay
sunil gavaskar rohit sharma mi
Chennai High Court tn government