நீட் தேர்வில் ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்ட மருத்துவர்கள்! 2 மருத்துவர்கள் உட்பட 7 பேர் கைது!

Default Image

உத்திரபிரதேசத்தில் பிரக்யராஜ் பகுதியை சேர்ந்த சகில் சோன்கர் என்ற மாணவர் நீட் தேர்வு எழுத விண்ணப்பித்திருந்த நிலையில், டெல்லியில் உள்ள ரோகினி செக்டாரில் இருக்கும், கேந்திரிய வித்யாலயா பள்ளியில் அவருக்கு அமைக்கப்பட்ட தேர்வு மையத்தில் மாணவர் சகில் சோன்கருக்கு பதிலாக, காப்பூர் மருத்துவக் கல்லூரியில் பணியாற்றும்  அவத் பிகாரி  என்ற எம்.பி.பி.எஸ் மருத்துவர் ஆள் மாறாட்டம் செய்து நீட் தேர்வினை எழுதியுள்ளார்.

மேலும், இதேபோல் அனுப் படேல் என்ற மாணவருக்கு பதிலாக சச்சின் குமார் மவுரியா என்ற எம்.பி.பி.எஸ் மருத்துவர் நீட் தேர்வு எழுதியுள்ளார். இந்த சம்பவத்தில் போலீசார், இரண்டு மருத்துவர்கள் உட்பட 7 பேரை கைது செய்துள்ளனர். மேலும், அவர்களிடம் இருந்து ரூ.15 லட்சத்தை பறிமுதல் செய்துள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்