ஆக்.,2 புதிய கட்டுப்பாடுகளுடன் கிராமசபை! நெறிமுறைகளை வெளியிட்டது உள்ளாட்சித்துறை

Default Image

தேசதந்தை மகாத்மா காந்தி பிறந்த நாளை முன்னிட்டு தமிழகமெங்கும் நாளை நடைபெற உள்ள கிராம சபை கூட்டங்களுக்கான வழிகாட்டுதல் நெறிமுறைகளை உள்ளாட்சித்துறை வெளியிட்டுள்ளது.

அதன்படி காலை 11 மணியளவில் கிராம சபை கூட்டங்களை நடத்தவேண்டும் என்று அதில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.கிராம சபை பாதுகாப்பான பொது வெளியிலோ அல்லது நல்ல காற்றோட்டமான கட்டிடத்திற்குள்ளாகவோ நடத்த வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.கூட்டத்தில் பங்கேற்பவர்கள் கண்டிப்பாக மாஸ்க் அணிவதுடன் 6 அடி இடைபெளி விட்டு அமர வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கிராம சபைக் கூட்டத்தில் பங்கேற்பவர்களுக்கு உடல் வெப்ப பரிசோதனை கட்டாயம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்