சுஷாந்த் சிங் தற்கொலை… காவல்துறையினர் விசாரனை… தீபிகா படுகோன் கண்ணீர்… நாடகம் போடவேண்டாம் என காவல்துறை கண்டிப்பு…

Default Image

பாலிவுட் இளம் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட்டின் தற்கொலை மரணத்தை தொடர்ந்து, இவ்வழக்கை காவல்துறையினர் தீவிரப்படுத்தினர்.

இதனையடுத்து  விசாரணையில் அவரது காதலி ரியா சக்கரபோர்த்தி கைது செய்யப்பட்டார். சுஷாந்த் சிங்கிற்கு போதை மருந்து பயன்படுத்தும் பழக்கம் இருந்தது என்பது அவர் மூலமாக தெரிய வந்தது. இது குறித்த போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் விசாரணை நடத்தியபோது பாலிவுட் நடிகைகள் தீபிகா படுகோனே, ஸ்ரத்தா கபூர், ரகுல் பிரீத் சிங், சாரா அலிகான் உள்ளிட்ட சில நடிகைகள் போதை பொருள் பயன்படுத்தியதாக தெரிய வந்தது.இதனை தொடர்ந்து சம்பந்தப்பட்ட நடிகைகளுக்கு சம்மன் அனுப்பி  விசாரித்துவருகின்றனர்.

இந்த நிலையில் கடந்த சனிக்கிழமை அன்று போதை பொருள் தடுப்பு துறை அலுவலகத்தில் விசாரணைக்காக ஆஜரானார் தீபிகா படுகோனே. அவரிடம் அதிகாரிகள் கிட்டத்தட்ட 5 மணி நேரம் விசாரணை நடத்தினார்கள். இந்த விசாரணையின்போது மூன்றுமுறை கண்ணீர் விட்டு அழுதார் என்றும், ஆனாலும் அதையெல்லாம் கண்டுகொள்ளாத அதிகாரிகள், அழுது நாடகம் போடாமல் விசாரணைக்கு முழுதாக ஒத்துழைக்குமாறு தீபிகா படுகோனேவிடம் கண்டிப்புடன் கூறினார்கள் என்றும், தகவல்கள் வெளியாகியுள்ளன.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்