டெல்லியில் தொடர்ந்து இரண்டாம் நாளாக 40-ஐ கடந்த கொரோனா உயிரிழப்பு.. மொத்தம் எவ்வளவு தெரியுமா?
டெல்லியில் கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 42 பேர் உயிரிழந்த நிலையில், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 5,236 ஆக அதிகரித்துள்ளது.
டெல்லியில் கொரோனா வைரஸின் தாக்கம் இம்மாத தொடக்கம் முதலே அதிகரித்து கொண்டே வரும் நிலையில், கடந்த 2 நாட்களாக கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 40 ஐ கடந்துள்ளது.
கடந்த 24 மணிநேரத்தில் 42 பேர் உயிரிழக்க, சனிக்கிழமை மட்டும் 46 பேர் உயிரிழந்தனர். இது அம்மாநிலத்தில் இதுவரை இல்லாதளவாகும். அங்கு கொரோனா நோய்த்தொற்றைக் கண்டறிய கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 51,416 சோதனைகள் நடத்தப்பட்டன, அவற்றில் 11,414 RTPCR / CBNAAT / TrueNat சோதனைகள் மற்றும் 40,002 ராபிட் பரிசோதனைகள் நடத்தப்பட்டது.
அதில் 3,292 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ள நிலையில், கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 2,36,651 ஆக அதிகரித்துள்ளது. 2,71,114 பேர் குணமடைந்து வீடு திரும்பினார்கள்.