மகள்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்திய தாய் கைது…!

Default Image

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை மேட்டுக்கடை பகுதியில் உள்ள ஒரு வீட்டில் வெளியூரை சேர்ந்த ஆண்கள் இரவு நேரங்களில் வந்து கொண்டு சென்றிருந்தனர். மேலும் இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் பாலியல் நடப்பதாக காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர். மேலும் இந்த தகவலை தொடர்ந்து தக்கலை பகுதியில் உள்ள காவல் துறையினர் அந்த வீட்டிற்குள் சோதனை செய்த பொழுது 3 சிறுமிகளுடன் இரண்டு ஆண்கள் இருந்தனர் காவல்துறையினரை பார்த்தவுடன் தப்பி ஓட முயன்றனர்.

காவல்துறையினர் இரண்டு பேரையும் மடக்கி பிடித்தனர். இரண்டு பேரையும் காவல்துறையினர் விசாரணை செய்த பொழுது ஒருவர் பெயர் ராஜ்மோகன் என்றும் அவர் வீரவ நல்லுரை சேர்ந்தவர் என்றும் தெரிய வந்துள்ளது. மற்றோருவர் பெயர் சுனில் இவர் தக்கலை பகுதியில் உள்ளவர் என்றும் இவர் கூலித்தொழில் செய்துவருவ தாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும் இதனை தொடர்ந்து விபச்சாரத்தில் ஈடுபடுத்தியததாக லதா என்ற பெண்ணையும் கைது செய்தனர். லதாவிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்ட பொழுது விசாரணையில் லதாவின் மூன்று பெண்ணையும் ஆசை வார்த்தை கூறி விபச்சாரத்தில் ஈடுபடுதியாக தெரியவந்துள்ளது. மேலும் அந்த மூன்று பெண்களையும் காவல்துறையினர் மீட்டு பரிசோதனைக்காக அப்பகுதியில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

இந்த நிலையில் இதனை தொடர்ந்து காவல்துறையினர் 3 பேரை கைது செய்துள்ளநிலையில், தப்பி ஓடிய பாபு, செல்வகுமார், ஆகிய இரண்டு பேரையும் காவல்துறையினர் மிகவும் தீவிரமாக தேடி வருகின்றனர். மேலும் பெற்ற தாய் மகள்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்திய சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்